எல்&டி நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்..!
முதலமைச்சர் விஜய் முன்னிலையில் இன்று (04.06.2026) தலைமைச் செயலகத்தில், லார்சன் & டூப்ரோ (Larsen & Toubro) லிமிடெட் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 18,600 கோடி ரூபாய் முதலீட்டிலான மூன்று முக்கியத் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட திட்டங்களின் மூலம், தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 8,200 நபர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உறுதியாகக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது





