ஊதச் சொல்லி மது சோதனை செய்யக் கூடாது…!
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என சோதிக்க முகத்துக்கருகில் ஊதச்சொல்லி சோதனை செய்வதை தவிர்க்குமாறு போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் கூடும் இடங்களில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு கொரொனா பரவல் தொடர்பான அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
வாகன சோதனையின் போது கட்டாயம் முக கவசம் அணியவும் மது அருந்தி வாகனம் ஓட்டுகிறார்களா என சோதிக்க பிரிக் அனலைசர் வியாதி மட்டுமே பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






