காதலியின் இறப்பை தாங்க முடியாமல் காதலனும் தூக்கிட்டு தற்கொலை..!
சென்னை தண்டையார்பேட்டையில் கருத்து வேறுபாடு காரணமாக சண்டையிட்டுக் கொண்ட காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இருவேறு கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக பெற்றோர் ஒப்புதலுடன் காதலித்து வந்த நிலையில் நேற்று மாலை இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த திவ்யா வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் காதலி இறந்த விரக்தியில் காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.







