உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று கோவையில் இருந்து பெங்களூரு வரை செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் ரயிலானது மகளிரால் இயக்கப்பட்டது
தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் மகளிர் தினத்தை கொண்டாடும் வகையிலும்,மகளிரை கெளரவிக்கும் வகையிலும் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் ஓட்டுனர், பாதுகாப்பாளர், டிக்கெட் பரிசோதகர் என அனைவரும் பெண்கள். கோட்ட மேலாளர் இரயிலை இயக்கும் அனைத்து பெண்களுக்கும் மலர்செண்டை அளித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும்,இரயில்வே அதிகாரிகளும் அவர்களுக்கு மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து உற்சாக படுத்தி அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




