சத்தீஸ்கர் அரிசி தரம் சரியில்லை.. பஞ்சாப், ஆந்திராவில் இருந்து வாங்கினோம் – எ.வ.வேலு
சத்தீஸ்கரில் இருந்து வரக்கூடிய அரிசி தரம் சரியாக இல்லாததால், பஞ்சாப் மற்றும் ஆந்திராவில் இருந்து தரமான அரிசி கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்பட்டதாக பல்வேறு பத்திரிகைகளும் பாராட்டியுள்ளன என திமுக எம்.எல்.ஏ. எ.வ.வேலு தெரிவித்தார்.
ரேஷன் அரிசி ஆடு, கோழிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் எ.வ.வேலு இந்த விளக்கத்தை அளித்தார். ரேஷன் அரிசியின் தரம் மற்றும் பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடு குறித்து சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது இந்த கருத்துகளை அவர் முன்வைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




