பெரியப்பாவை கொலை செய்த இரண்டு மகன்கள்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே நிலத்தகராறில் பெரியப்பாவை கீழே தள்ளிவிட்டு கொன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். முனிவாழை கிராமத்தை சேர்ந்த ஏழுமலை தனக்கு சொந்தமான நிலத்தில் வீடுகட்ட கடகால் எழுப்பியுள்ளார்.
இதையடுத்து அந்த இடத்தை இதுவரை பயன்படுத்தி வந்த ஏழுமலையின் தம்பி சிங்காரவேலனின் மகன்கள் ஹரிகிருஷ்ணன், ராஜசேகரும் தங்கள் பெரியப்பா வீடு கட்டுவதை தடுக்கும் நோக்கில் வாக்குவாதம் செய்து அவரை அடித்து கீழே தள்ளியுள்ளனர். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார் என போலீசார் கைது செய்தனர்.







