இருசக்கர வாகனம் மீது லாரி மோதி பயங்கர விபத்து..!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். காவேரி நகரை சேர்ந்த சந்துரு என்பவர் நண்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது மூக்கு கண்ணாடி தவறி சாலையில் விழுந்ததாக கூறப்படுகிறது.
அதனை எடுக்க முற்பட்ட பொழுது எதிர்பாராத விதமாக பின்னால் சென்ற லாரி இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் சந்துரு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒரு இளைஞர் படுகாயம் அடைந்தார். விபத்தின் போது லாரியின் பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனம் ஓடியதால் மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.





