திருப்பூர்: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
பொங்கல் பண்டிகைக்கு இன்றைய தினம் முதல் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் பனியன் நிறுவனங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளியூர் செல்லும் மக்கள், பேருந்து நிலையங்களில் அதிக அளவு திரண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கும் வகையில், வெடிகுண்டு நிபுணர்கள் பேருந்து நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். மேலும், பயணிகளின் உடமையையும் சோதனைக்கு உட்படுத்தினர்.





