ஆயுதத்தை வைத்து ரீல்ஸ் வெளியிட்ட இளைஞன்..!
மனம் வருந்தி வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நெல்லை மாவட்ட பணக்குடியை சேர்ந்த மாணிக்கம் என்ற இளைஞர் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு இருசக்கர வாகனத்தில் இருந்து ஆயுதத்துடன் வீர வசனம் பேசி இன்ஸ்டாவில் ரில்ஸ் செய்து வெளியிட்டார்.
இது சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து அவரை பணகுடி போலீசார் கைது செய்தனர். நேற்று முன் தினம் சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்தார். அதில் இருசக்கர வாகனத்தில் தயவுசெய்து ஆயுதங்களை வைத்து வீடியோவில் வெளியிட்டு விடாதீர்கள் என விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.





