வெளிநாட்டிற்கு படிக்க சென்ற மாணவி திடீரென மின்னல் தாக்கியதில் உயிரிழந்த சோகம்..!
அமெரிக்காவில் மின்னல் தாக்கிய இந்திய மாணவி கோமாநிலைக்கு சென்றதால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தியாவை சேர்ந்த மாணவி மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்குள்ள போஸ்டன் பல்கலைக்கழகத்தின் முதன்மை முதுகலை தகவல் தொழில்நுட்பம் படித்து வந்ததில் அதில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற்றுள்ளார். இந்த நிலையில் அவரை திடீரென மின்னல் தாக்கியது. இதனால் அவர் கீழே விழுந்தார். இதை பார்த்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மின்னல் தாக்கியதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மூளை பாதிக்கப்பட்டதால் அவர் சுயநினைவு இழந்து கோமா நிலைக்கு சென்று விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின் தொடர்ந்து மருத்துவர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.
மாணவி கோமாவில் இருக்கும் நிலையை அறிந்ததும் இந்தியாவிற்கும் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர்.






