ஆசீர்வாதம் வாங்குவது போல நடித்து கொள்ளையடிக்கும் திருடன்..!
சென்னையில் தனியாக நடந்து செல்லும் மூதாட்டிகளை குறி வைத்து ஏமாற்றி கைவரிசை காட்டி வந்த கொள்ளையனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
உண்மையில் மயிலாப்பூரில் குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் வழங்க வேண்டும் என கோரி தனியாக நடந்து சென்ற மூதாட்டியை அழைத்து சென்றவன் மூதாட்டி அணிந்திருந்த மோதிரத்தை வாங்கி கொண்டு தப்பி விட்டார்.
அந்த கொள்ளையன் பல மூதாட்டிகளை ஏமாற்றி கைவரிசையை காட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் தலைமறைவாக இருந்தவனை கைது செய்தனர்.







