ஆன்லைன் ரம்மி விளையாட கொள்ளையனாக மாறிய பொறியியல் மாணவர்..!
ஆன்லைன் ரம்மி விளையாட பணம் தேவைப்பட்டதால் பொறியியல் மாணவர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் கன்னியாகுமரியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கருங்கல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் சச்சின் டெண்டுல்கர் சிக்கியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியதில் ஆன்லைனில் பல லட்சம் ரூபாய் வரை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அதன் மீது ஈர்ப்பு குறையாததால் வழிப்பறி செய்து அதில் கிடைத்த பணத்தை வைத்து விளையாடி வந்ததாக தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து ஜஸ்டின் ராஜை கைது செய்த காவல்துறையினர் வழிப்பறி செய்த தங்க நகைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.







