நவம்பர் இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்த இலக்கு..!
தமிழகத்தில் நாளை 50 ஆயிரம் இடங்களில் மாபெரும் கொரொனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் நிலையில் மக்கள் அவற்றை பயன்படுத்தி தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
நவம்பர் இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






