நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த கப்பல்..! பயணிகள் பத்திரமாக மீட்பு..!
பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் சென்ற பயணிகள் கப்பலில் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்திற்குள்ளானது. 48 பயணிகள் மற்றும் 34 பணியாளர்களை ஏற்றிச் சென்ற படகு மணிலாவில் தெற்கே உள்ள துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்து படகு முழுவதும் பற்றி எரிந்தது. இதில் பலர் கடலில் குதித்தனர். கடலோர காவல்படையினர் படகிலிருந்து 72 பேரையும் பத்திரமாக மீட்டனர்.





