இந்தியர்களை தரக்குறைவாக பேசிய அமெரிக்க பெண்ணை கைது செய்த போலீசார்..!
அமெரிக்காவில் இந்தியர்களை தரக்குறைவாக பேசியதாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தின் வாகனத்தை நிறுத்தி அமெரிக்கவாழ் மெக்சிகோவை சேர்ந்த மிராண்டா என்ற பெண் அமெரிக்க வாழ் இந்திய பெண்கள் நான்கு பேரிடம் மிக கடுமையாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் இந்திய பெண்களைத் தாக்க முயற்சி செய்ததோடு இந்தியர்களை வெறுப்பதாக இனவெறியை தூண்டுவதாக பேசும் வகையில் பேசியுள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலிசார் தீவிரவாத அச்சுறுத்தல் என்ற பெயரில் அந்த பெண்ணை கைது செய்தனர்.





