கடிக்க வந்த ராஜநாகத்திடம் இருந்து கண்ணிமைக்கும் நொடியில் உயிர் தப்பிய நபர்..!
கர்நாடக மாநிலத்தில் ராஜநாகத்தை பிடிக்கும் போது தன்னைக் கடிக்க வந்த பாம்பிடமிருந்து நூலிழையில் ஒருவர் உயிர் தப்பிய வீடியோ வெளியாகியுள்ளது. ஷிமோகா என்ற இடத்தில் வனப்பகுதியில் மரத்தின் கீழ் பாதியிலிருந்து ராஜநாகத்தை பாம்பு பிடிப்பவர் பிடிக்க முயற்சி செய்தார்.
அப்போது அவரை உதவியாளர் பாம்பின் வாலை பிடித்து தூக்கவே சீரிய அந்த பாம்பு அந்த நபரை கடிக்க முயன்றது. இதிலிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிய அந்த நபரை மீண்டும் பாம்புக்கடிக்க வர இரண்டாம் முறையாகவும் அந்த நபர் உயிர் தப்பினார்.






