திருவிழாவுக்கு வந்த நபர்.. நிலத்தை பார்க்க சென்ற பொழுது நிகழ்ந்த ஷாக்..!
மதுரையில் உயிரோடு இருக்கும் தம்பதியினர் இறந்து விட்டதாக கூறி இறப்பு சான்று பெற்று அதன் மூலமாக போலி வாரிசு சான்று வாங்கி 70 லட்சம் மதிப்புள்ள நிலம் வேறு ஒருவருக்கு பத்திரம் பதியப்பட்டதாக பாதிக்கப்பட்ட மத்திய அரசு முன்னாள் ஊழியர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தனது நிலம் அபகரிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அக்கம் பக்கத்தில் எல்லாம் கேட்ட பொழுது அந்த இடத்தை வேறொருவர் வாங்கி வீடு கட்ட தயார் செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். இடம் வேறொருவர் பெயர் பத்திரம் செய்யவிருப்பது தெரியவரவே இது குறித்த புகார் அளித்துள்ளார்.





