உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்திய ஹிஜாப் ..!
ஈரானில் இளம் பெண் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்ததை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்திய பெண் பத்திரிக்கையாளர்கள் 2 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முறையாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி போலீசாரால் கைது செய்யப்பட்ட மணி கோமா நிலைக்கு சென்று உயிரிழந்தது உலகை அதிர்வளையில் ஏற்படுத்தியது. ஈரான் அரசை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் வெடித்தன.
இதனை வெளியிட்ட பெண் பத்திரிகையாளர் இரண்டு பேர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவுடன் கைகோர்த்து சதி திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் அவர்களுக்கு ஆறு மற்றும் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.





