கழிவறைக்கு சென்ற பயணியை விட்டுச் சென்ற அரசு பேருந்து ஓட்டுனர்..!
உதகையிலிருந்து கோவைக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் அரசு பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் வழியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக கீழே இறங்கிய பொழுது அவரை விட்டுவிட்டு பேருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது.
மற்றொரு பேருந்தில் ஏறி அந்த பேருந்தை மேட்டுப்பாளையத்தில் மடக்கிய அந்த பயணி ஓட்டுனர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தான் கழிவறைக்கு சென்றிருப்பது குறித்து பேருந்தில் இருந்த தனது மனைவி கூறியும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கண்டுகொள்ளவில்லை அந்த பயணி தெரிவித்தார்.





