காதலன் வீட்டின் முன்பு பேண்ட் வாத்திய குழுவுடன் போராட்டம் நடத்திய காதலி..!
மத்திய பிரதேசத்தில் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன் வீட்டின் முன்பு பேண்ட் வாத்திய குழுவுடன் சேர்ந்து காதலி போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோரக்பூரைச் சேர்ந்த சந்திப் மௌரியா என்பவருக்கும், அவரது அத்தை மகளுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் வளர்ந்ததன் காரணமாக உடல் ரீதியாக நெருங்கி பழகுகின்றனர்.
பின்னர் மௌரியாவுக்கு ராணுவத்தில் வேலை கிடைத்தவுடன் அத்தை பெண்ணை திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் மறுத்து வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்கவும் முயற்சிகள் நடைபெற்றுள்ளன.
காதலியின் குடும்பத்தினர் பேண்ட் வாத்தியக் குழுவுடன் காதலன் வீட்டிற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் மவுரியா ராணுவ வீரர் என்பதால் ராணுவ நீதிமன்றத்தில் புகார் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.





