சாலையில் சென்ற ஐந்து பேரை வெறித்தனமாக கடித்த நாய்..!
ராமேஸ்வரம் அருகே 5க்கும் மேற்பட்டவர்களை கடித்து குதறிய நாய்க்கு உரிமையாளர் வாய் பூட்டு போட்டதால் பொதுமக்கள் அச்சமின்றி தெருக்களில் நடந்து சென்றனர்.
ஐஸ் பிளான்ட் தெருவில் வசிக்கும் ஜீவா என்பவர் வளர்த்து வரும் நாயானது அந்த பகுதியில் உள்ள மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனையடுத்த பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் உரிமையாளர் நாய்க்கு வாய் பூட்டு போட்டுள்ளார்.






