இறந்த பெண் மயிலை பிரிய மறுத்த ஆண் மயில்.!
ராஜஸ்தான் மாநிலத்தில் இறந்துபோன பெண் மயிலை பிரிய மறுத்து பின் தொடர்ந்து செல்லும் ஆண்மயிலின் காணொளி காண்போரின் இதயத்தை கனக்கச் செய்தது. ஒரு ஆண் மயிலும், பெண் மயிலும் நான்காண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த நிலையில் பெண் மயில் திடீரென உயிரிழந்தது.
அதன் உடலை வனத்துறையினர் எடுத்து சென்ற பொழுது பின் தொடர்ந்து சென்ற ஆண் மயில் பெண் மயிலை அடக்கம் செய்யும் வரை அருகிலேயே இருந்துள்ளது.





