நீர் வீழ்ச்சியில் விழுந்து உயிருக்கு போராடிய பசு..!
இங்கிலாந்து 150 அடி உயரம் உள்ள நீர் வீழ்ச்சியில் விழுந்த 5 நாட்களாக தவித்த பசு அந்த நாட்டின் வடமேற்குப் பகுதியிலுள்ள நார்த் அம்பர்லேண்ட் என்ற இடத்தில் விவசாயி ஒருவர் பசுக்களை வளர்த்து வந்தார். இந்நிலையில் அதில் ஒரு பசு கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு சென்றபோது திடீரென மாயமானது.
பல்வேறு இடங்களில் தேடியதன் விளைவாக அந்த பகுதியில் உள்ள தம்பிரியா என்ற 150 அடி உயரம் உள்ள நீர் வீழ்ச்சியில் விழுந்த பசு அங்கு மணற்பாங்கான பகுதியில் சிக்கி உயிருக்கு போராடியது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த விமானப்படையினர் பூமரக ஹெலிகாப்டர் மூலம் பசுவை அங்கிருந்து தூக்கி சென்றனர். பின்னர் அந்த பசுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.







