ஆழ்துளை கிணற்றில் மாறிய நீரின் நிறம்..!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஓஎன்ஜிசி எண்ணெய் எரிவாயு சேமிப்பு கிடங்கு அருகே உள்ள ஆழ்துளை கிணற்றில் நீரின் நிறம் மாறியுள்ளது. புகழேந்தி என்பவருக்கு சொந்தமான குடிநீருக்கான ஆழ்துளை கிணற்றில் காவி நிறத்தில் தண்ணீர் உள்ளது.
அதனை பயன்படுத்தியவர்களுக்கு காய்ச்சல், ஒவ்வாமை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஓஎன்ஜிசி எண்ணெய் சேமிப்பு கிடங்கில் ஆழ்துளை கிணற்று நீரின் நிறம் மாறிவிட்டதாக நிலத்தடி நீரை அதிகாரிகள் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






