சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு..!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக கடந்த ஜூலை 24 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.
விடுமுறை விடப்பட்டதற்கு ஈடுசெய்யும் வகையில் வரும் சனிக்கிழமை ஆகஸ்ட் 27 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.






