போதைப்பொருள் கடத்தல் மையமாகும் தமிழ்நாடு..!
சர்வதேச மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் மையமாக தமிழ்நாடு மாறி வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகே கடத்தல் 7 மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதால், இதற்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். போதைப் பொருள் கடத்தல், விற்பனையை தடுக்க அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.





