கொரொனா தடுப்பு பணிக்கு 5 கோடி நிதி வழங்கிய சுந்தர் பிச்சை!
கூகுள் மற்றும் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கொரொனா தடுப்பு நடவடிக்கைக்காக கிவ் இந்தியா என்ற அமைப்பிற்கு 5 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். கொரொனா வைரஸ் பரவலை தடுக்க அமல் படுத்தப் பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவால் லட்சக்கணக்கான தினக் கூலிகள் வறுமையில் தவிக்கின்றன. ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக கூகுள் நிறுவனம் சார்பாக 5 கோடி ரூபாய் கிவ் இந்தியா என்ற தன்னார்வ அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தின கூலி தொழிலாளர்களுக்கு உதவிய கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு நன்றி என்று இந்தியா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் உரையை ஆவலுடனும் கவலையுடனும் எதிர்பார்க்கிறேன் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில் ஊரடங்கு வரும் 30ஆம் தேதி முதல் நீடிப்பதை தவிர முடியாது என்று தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
ஊர் மக்கள் வாழவேண்டும் எனக் குறிப்பிட்ட அவர் 21 நாட்களாக தவிக்கும் ஏழை நடுத்தர வர்க்க மக்கள் எதிர்பார்ப்பது பண உதவி என தெரிவித்துள்ளார்.







