--- --:--:-- --

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வெல்லம் சேர்க்க வேண்டும் – பாலகிருஷ்ணன் கடிதம்

6

பொங்கல் பரிசு தொகப்பில் கரும்பு. வெள்ளம் மற்றும் இதர பொருட்களையும் சேர்த்து வழங்குமாறு முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

 

பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய், பச்சரிசி, சர்க்கரை அடங்கிய தொகுப்பு அறிவித்திருப்பதை வரவேற்பதாக அந்த கடிதத்தில் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

 

இந்த ஆண்டும் தமிழ்நாடு அரசு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கூடுதல் கரும்பை விளைவித்திருப்பதாக தெரிவித்தனர். பொங்கல் பரிசு தொகையில் கரும்பு இடம்பெறாததால் விவசாயிகள் பெறும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

அதேபோல் பொங்கல் பரிசில் வெல்லம் இடம் பெறாதது உற்பத்தியாளர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Right Menu Icon