இந்திய ராணுவ வீரர்கள் செல்போன் பயன்படுத்த திடீர் கட்டுப்பாடு..!
சீன எல்லைக்கருகே பாதுகாப்பு பணியில் இருக்கும் இந்திய வீரர்கள் சீன தயாரிப்பு செல்போன்களை பயன்படுத்த வேண்டாம் என உளவுத்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீன மொபைல் ஃபோன்களை பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அத்தகைய போன்களில் சைபர் இருப்பதாகவும் உளவுத்துறை கூறியுள்ளது.
ராணுவ அதிகாரிகள் சீன தயாரிப்பு பொருள்களை பயன்படுத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ராணுவ வீரர்களும் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.






