ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்..!
யாஸ் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கி உள்ளது. யாஸ் புயல் அதிரடியாக நேற்று முதல் ராமேஸ்வரம் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் வழக்கத்திற்கு மாறாக சூறை காற்றுடன் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அதிகாலை முதல் ராமேசுவரம் பகுதியில் உள்ள கடல் பகுதி வழக்கத்துக்கு மாறாக உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நாட்டு படகுகள் தரை தட்டி உள்ளன.






