விமானத்தில் திடீர் நெஞ்சு வலி.. மதுரை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி..!
மதுரையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட விமானத்தில் சாய்சரண் என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சாய்சரண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருடன் வந்த இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேர் பயணத்தை ரத்து செய்தனர். 20 நிமிட தாமதத்திற்கு பின் விமானம் ஹைதராபாத் புறப்பட்டு சென்றது.





