வறுமையில் உள்ளவர்களுக்கு பேட்மேன் உடையணிந்த ஒருவர் உணவு வழங்கி உதவி..!
சிலி நாட்டில் வீடுகளில் வசிப்பவர்களுக்கு பேட்மேன் உடையணிந்த ஒருவர் உணவு வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கொரொனா தாக்கத்தின் காரணமாக தலைநகர் சாண்டியாகோவில் ஏராளமான வீடற்றவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்பட்டது.
இதனைக் கண்டு வேதனையடைந்த ஒருவர் அவர்களுக்கு தேவையான உணவை சூடாக தயாரித்து வழங்குகிறார். மேலும் அவர்களுக்கு தேவையான சானிடைசர் மற்றும் முககவசங்களையும் வழங்கி ஆறுதல் கூறி வருகிறார்.
தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத அந்த நபரின் செயல் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.






