பானிபூரியில் சிறுநீரை கலந்து விற்ற கடைக்காரர்..!
அசாம் மாநிலம் கவுகாத்தியில் பானிபூரியில் சிறுநீரை கலந்து அறுவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட கடைக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பானிபூரி கடை நடத்திவரும் கடைக்காரன் தன் சிறுநீரை ஒரு கப்பில் பிடித்து அதை பானிபூரிக்கு வழங்கப்படும் தண்ணீரிலேயே கலக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியானதையடுத்து அந்த கடைக்காரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







