--- --:--:-- --

பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு

mumbai sensex

மும்பை பங்குச் சந்தைகள் இன்றைய வர்த்தகம்முடிவில், 222 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு பெற்றது.

 

இன்று, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிப் பங்குகள் விலை உயர்வால் மும்பை பங்குச் சந்தை புதிய உச்சம் தொட்டு சாதனை படைத்துள்ளது.

 

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்ந்து 40,470 புள்ளிகளானது. இடைநேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 359 புள்ளிகள் அதிகரித்து 40,607 புள்ளிகளைத் தொட்டது.

 

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃ ப்டி 44 புள்ளிகள் அதிகரித்து 11,961 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

Leave a Reply

Right Menu Icon