குடும்பத் தலைவிகளுக்கு மாதமாதம் ரூ.1,000 – தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெற ஜூலை 17ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. திட்டம் செயலகம் குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தகுதியான பயனாளிகளை தேர்ந்தெடுக்க தேவையான இடங்களில் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் வருவாய் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





