ஏற்கனவே திருமணம் ஆன 3 ஜோடிகளுக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்த பாஜக தலைவர் அண்ணாமலை..!
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தி வைத்த திருமண நிகழ்வில் ஏற்கனவே திருமணம் ஆன மூன்று தம்பதிகளுக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்கப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
போமதூர் பகுதியில் பாஜக சார்பில் 39 துறைகளுக்கு ஜோடிகளுக்கு திருமணம் அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சார்பில் நடத்தி வைக்கப்பட்டது.
இதில் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்ற குழந்தைகளும் இருப்பதாக தகவல் வெளியாகி சற்று அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. இது பணம் மற்றும் நகைக்காக நிகழ்ந்ததா அல்லது திருமண ஜோடிகள் கிடைக்காமல் அவசர ஏற்பாடு செய்யப்பட்டதா என அனைவரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.





