--- --:--:-- --

இன்று தொடங்கிய ரமலான் நோன்பு ..!

3

மிழகம் மற்றும் புதுச்சேரியில் ரமலான் நோன்பு இன்று தொடங்கியது. புதன்கிழமை அதிகாலை முதல் நோன்பு தொடங்கலாம் என தலைமை காஜி முன்னதாக தெரிவித்திருந்தார்.

 

அதன்படி பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகையுடன் இஸ்லாமியர்கள் இன்று நோன்பை தொடங்கினர். புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கொரொனா விதிகளை பின்பற்றி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். நோன்பு காலங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படும் நாகூர் தர்காவில் குறைந்த அளவிலேயே தொழுகைக்கு வந்திருந்தனர்.

 

மதுரை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் இரவு நேர சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மகபூப்பாளையம், நேரு திருமங்கலம், திருப்பரங்குன்றம், சோழவந்தான், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

 

புதுச்சேரி மாநிலத்திலும் ரமலான் நோன்பு தொடங்கியது. பல்வேறு மசூதிகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு தொழுகை மேற்கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon