திருத்தணி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்..!
திருத்தணி அருகே உள்ள தெக்களூர் கிராமத்தில் முறையான குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தங்களுக்குக் கடந்த 15 நாட்களாகச் சரியாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்து சாலையில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்து அப்புறப்படுத்தியுள்ளனர்.





