--- --:--:-- --

சிறை கைதிகளுக்கு கொரொனா தொற்று இல்லை!

12

தமிழக சிறை கைதிகளின் கொரொனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பரோல் வேண்டி பல கைதிகள் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் சிவஞானம், கல்யாணசுந்தரம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது சிறைகளில் கைதிகள் பாதுகாப்பாக உள்ளதாகவும், புதிய கைதிகளை அடைக்க 37 மாவட்ட மற்றும் கிளை சிறைகள் தனி சிறைகளாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அசாதாரண சூழலால் தமிழக சிறைகளில் புதிதாக 58 செல்போன்கள் வாங்கப்பட்டு வீடியோ கால் மூலமாக 15 ஆயிரம் கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் பேசி உள்ளதாகவும் கூறப்பட்டது.

 

தமிழக சிறைத்துறை இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon