தீவிரவாதி குடும்பத்துடன் பேச அனுமதி!
2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி தஹாவூர் ராணா, அவனுடைய குடும்பத்துடன் ஒருமுறை போனில் பேச டெல்லி கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
தற்போதைய வழக்கறிஞரை மாற்றிவிட்டு, புதிய வழக்கறிஞர் நியமிப்பது தொடர்பாக குடும்பத்தினருடன் பேச வேண்டும் என அவன் அனுமதி கோரி இருந்தான். தற்போது டெல்லி சட்ட சேவைகள் ஆணையத்தின் வழக்கறிஞர் பியூஷ் சச்தேவா, ராணாவிற்கு சேவை வழங்கி வருகிறார்.





