இடைத்தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நடத்த அனுமதி..!
பீகார் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நடத்த நிபந்தனையுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.கொரொனா பொது முடக்கத்தில் கடந்த 30ஆம் தேதி பல்வேறு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பீகாரில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் 56 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி பரப்புரை மேற்கொள்ள மத்திய அரசு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
இதற்காக ஐந்தாம் கட்ட தலைப்பில் மத்திய அரசு திருத்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி வரும் 15ம் தேதி முதல் அரசியல் கூட்டங்களில் 100 பேருக்கு அதிகமானோரை அனுமதிக்கலாம் உள் அரங்குகளில் பாதி அளவு அல்லது அதிகபட்சம் 200 பேரை அனுமதிக்கலாம்.
முகக்கவசம், தனிமனித இடைவெளி, கிருமிநாசினி பயன்பாடு, வெப்பநிலை சோதனை ஆகிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.






