ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு..!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கின் விசாரணையை தினந்தோறும் நடத்தி 2025 ஜீன் மாதத்திற்குள் முடிக்க மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெற்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.





