கொரொனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஒரு தடுப்பூசியே போதும்..!
கொரொனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஒரே ஒரு தடுப்பூசி எப்போது எதிர்ப்பாற்றலை உருவாக்குவதாக ஹைதராபாத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனையில் 220 மருத்துவ பணியாளர்களிடம் நடத்திய ஆய்வில் தொற்று ஏற்பட்ட பின் ஒரே ஒரு தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர்களுக்கு போதிய அளவு எதிர்ப்பாற்றல் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆய்வுப்படி தொற்று ஏற்பட்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி சேர்த்துக் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. தங்கள் ஆய்வுகள் மூலம் நிறைய தடுப்பூசிகளை சேமிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. த
னியார் மருத்துவமனையின் ஆய்வை சரிபார்த்த பின் அந்த தகவலை தொற்று நோய்கள் குறித்த சர்வதேச இதழ் ஒன்று கட்டுரையாக வெளியிட்டுள்ளது.







