ஒமிக்ரானில் இருந்து குணமடைந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான்…!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் மேலும் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கோ நாட்டில் இருந்து ஆரணி திரும்பிய ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவரது தங்தைக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இருவரும் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில் அவரது குடும்பத்தில் மற்றொருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.





