பாரசிட்டமால் மாத்திரையை பெற மருத்துவர் பரிந்துரை தேவையில்லை!
பாரசிட்டமால் மாத்திரைகளை பெற மருத்துவர் பரிந்துரை தேவையில்லை என்று உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு கூறியுள்ளது. பாரசிட்டமால் மாத்திரைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க உத்தரவிடக் கோரி ஜோயல் சுகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பாரசீட்டாமால் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையின்றி வழங்கக்கூடாது என்றும் உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அரசின் விளக்கத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.






