ஒவ்வொருவர் மீதும் ரூ. 1,28,000 கடன் – அங்கு தான் ஸ்டாலினை தேட வேண்டும் – மரிய வில்சன்
சட்டசபையில் பேசிய முன்னாள் அமைச்சர் ரகுபதி, எங்கே இருக்கிறார் எங்கள் தலைவர் என்று கேட்டவர்களுக்கு சொல்கிறோம் மகளிர் உரிமை தொகை வாங்குகிற ஒவ்வொரு உள்ளத்திலும் இருக்கிறார். விடியலை நீங்கள் எடுத்துவிட்டீர்கள். பரவாயில்லை, எங்களால் தமிழ்நாட்டிற்கு மீண்டும் விடியல் கிடைக்கும். அந்த விடியல் பயணத்தில் அவர் இருக்கிறார் என்றார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் மரிய வில்சன், மகளிர் உரிமை தொகை பற்றி கேட்டால் உங்கள் தலைவர் பெயர் தான் வரும் என்று சொல்கிறீர்கள். ஒன்றை மறந்துவிட்டீர்கள்.. தமிழ்நாட்டில் ஒவ்வொருவர் மீதும் ஒரு லட்சத்து 28 ஆயிரம் கடன் விட்டுவிட்டு சென்றதும் நீங்கள் தான். அங்கு டான் அவரை தேட வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு லட்சத்து 28 ஆயிரத்தை யாரிடம் விட்டுவிட்டு சென்றீர்கள் என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




