பெருமாள் வேடம் அணிந்துள்ள நித்தியானந்தா..!
அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நித்தியானந்தாவின் வெங்கடேசப்பெருமாள் வேடம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சங்கு சக்கரத்துடன் நகைகளை அணிந்த ஒளிரும் கிரீடத்துடன் புகைப்படம் வெளியிட்டிருக்கும் நித்யானந்தா கைலாச நாட்டுக்கு வருமாறு தனது பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கைலாச நாட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இலவசமாக கடவுச் சீட்டை பெற்றுக் கொள்ளுமாறும் உலகின் முதல் இந்து நாடான கைலாசா என அவர் கூறியுள்ளார். நித்தியானந்தாவின் இந்த புகைப்படங்களுக்கு கடுமையான கண்டனங்களும் விமர்சனங்களும் சமூகவலைதளங்களில் வந்துள்ளன.
பெருமாள் பக்தர்கள் இந்த புகைப்படங்களுக்கு தங்களின் கடும் எதிர்ப்பை பதிவிட்டுள்ளனர்.






