--- --:--:-- --

மாட்டு கொட்டகையாக மாறி வரும் புது ரேஷன் கடை..!

8

ரோடு மாவட்டம் பவானி அருகே 9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலை கடை செயல்பாட்டுக்கு வராமல் மாட்டுக்கொட்டகையாக மாறி வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

அந்த பகுதியில் சிதலமடைந்து தனியார் கட்டடத்தில் பணிகள் நடை பெற்று வருவதால் புதிய நியாயவிலை கடையைக் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்படி புதிய கட்டிடம் கட்டி ஆகஸ்ட் மாதம் திறப்பு விழா நடைபெற்றது.

 

இதில் நான்கு மாதங்கள் கடையை திறக்காததால் அது மாடுகள் வசிக்கும் இடமாக மாறியுள்ளது. மேலும் சிதிலமடைந்து கட்டிடத்தில் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Right Menu Icon