திருப்பூர் மாவட்டத்தில் புதிய உச்சம்; இன்று ஒரே நாளில் 1561 போருக்கு கொரோனா தொற்று உறுதி ! 3 பேர் பலி!!
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தாக்குதலுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 39ஆயிரத்து 37 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 31 ஆயிரத்து 662 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 7092 பேர் தற்போது திருப்பூர் மற்றும் கோவை மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on Xகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 741 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 6 வயது பெண் உட்பட 59, 81 வயது ஆண்கள் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனையடுத்து இறப்பு எண்ணிக்கை 283 ஆக உள்ளது.





