ஜானி மாஸ்டருக்கான தேசிய விருது நிறுத்தி வைப்பு..!
பாலியல் புகாரில் சிக்கிய நடன இயக்குநர் ஜானிக்கான தேசிய விருது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டதால், விருது குழு இம்முடிவை எடுத்துள்ளது.
திருச்சிற்றம்பலம் படத்தின் ‘மேகம் கருக்காதா’ பாடலுக்காக அவருக்கு விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், விருது அறிவிக்கப்பட்ட சில நாள்களிலேயே பாலியல் வழக்கில் கைதான அவர், தற்போது ஜாமினில் வெளியே உள்ளார்.



